20 21
இலங்கைசெய்திகள்

நாட்டின் அரசியல் முறை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நாமல் ராஜபக்ச

Share

நாட்டின் அரசியல் முறை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நாமல் ராஜபக்ச

நாட்டின் அரசியல் முறை, மாற்றப்பட வேண்டும் என்று அடிக்கடி கூறப்பட்டாலும், அது தற்போதுள்ள அரசாங்கத்தின் வழிக்கேற்ப மாற்றியமைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் வேட்டை நடத்தப்பட்டால், நீதிமன்றத்தில் முன்னிலையாகி, நீதிமன்றத்தின் உதவியை நாடுவதன் மூலம் சட்டத்தை பின்பற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடும் திறன் நாட்டில் யாருக்கும் இல்லை. எனவே எந்த விசாரணைக்கும் தாம் தயாராக உள்ளதாக நாமல் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பதவியை தக்கவைக்க ஏற்கனவே ஐந்து வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசில் அங்கம் வகிப்பதால் அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இல்லை.

அத்துடன் இனி ஒரு போராட்டத்தை வழிநடத்த யாரும் இல்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...