17
இலங்கைசெய்திகள்

கம்மன்பிலவின் அறிக்கை விவகாரம் அரசியல் நாடகம்: பகிரங்கப்படுத்தப்படும் குற்றச்சாட்டு

Share

கம்மன்பிலவின் அறிக்கை விவகாரம் அரசியல் நாடகம்: பகிரங்கப்படுத்தப்படும் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வரும் உதய கம்மன்பில நாடக அரசியலை நடத்துவதாக இரத்தினபுரி மாவட்ட சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் சமீர பிரசனக சோமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வஜன பலய கட்சியில் இருந்து விலகுவது தொடர்பில் இரத்தினபுரியில் நேற்று(31.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், கட்சியன் தலைவர், திலித் ஜயவீர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் மீது உதய கம்மன்பில குற்றம் சுமத்தி வருகிறார்.

எனினும் அதே குற்றச்சாட்டுடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோன், பூஜித ஜயசுந்தர தொடர்பில் மௌன கொள்கையை உதய கம்மன்பில கடைபிடிப்பதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் சர்வஜன பலய அரசியல் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இனவாத வேலைத்திட்டம் குறித்து பெருமையடித்தமை, வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் சமீர பிரசனக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுபோன்ற கட்சியுடன் இணைந்து அரசியல் செய்வது அருவருப்பானது என்றும், கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...