15 scaled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

Share

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியும், தாம் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளன என்ற தகவல்களை வெளியிட்டுள்ளன.

சில அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களையும், சில அணிகள் குறைந்தபட்சம் 2 வீரர்களையும் தக்க வைத்துள்ளன.

இதன்படி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, ருதுராஜ்க்கு 18 கோடி, மதீச பத்திரனவுக்கு 13 கோடி, சிவம் துபேக்கு 12 கோடி, ஜடேஜாவுக்கு 18 கோடி, மஹேந்திர சிங் தோனிக்கு 4 கோடி ரூபாய்களை வழங்கி அவர்களை தக்க வைத்துள்ளது.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஸ் தயாள் ஆகிய மூவரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக விராட் கோலிக்கு 21 கோடி ரூபாயும், ரஜத் பட்டிதர்க்கு 11 கோடி ரூபாயும், யாஸ் தயாளுக்கு 5 கோடி ரூபாய் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு 18 கோடி, சூர்யகுமார் யாதவ்வுக்கு 16.35 கோடி, ஹர்திக் பாண்டியாவுக்கு 16.35 கோடி, ரோஹித் சர்மாவுக்கு 16.30 கோடி, திலக் வர்மாவுக்கு 8 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டு அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ரிங்கு சிங்குக்கு 13 கோடி, வருண் சக்கரவர்த்திக்கு 12 கோடி, சுனில் நரைன்னுக்கு 12 கோடி, ரஸலுக்கு 12 கோடி, ஹர்சித் ராணாவுக்கு 4 கோடி, ரமன்தீப் சிங் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில், பெட் கம்மின்ஸ்ஸ_க்கு 18 கோடி, அபிசேக் சர்மாவுக்கு 14 கோடி, நிதிஸ் ரெட்டிக்கு 6 கோடி, ஹென்ரிச் கிளாசன் 23 கோடி, டிராவிஸ் ஹெட் 14 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்ட அடிப்படையில் அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்ஸில், ரசித் கான் 18 கோடி,சுப்மன் கில் 16.50 கோடி, சாய் சுதர்சன் 8.50 கோடி, ராகுல் தேவாட்டியா 4 கோடி, சாரூக்கான் 4 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரான்னுக்கு 21 கோடி ரூபாய், ரவி பிஸ்னாய்க்கு 11 கோடி ரூபாய், மாயங் யாதவ்வுக்கு 11 கோடி ரூபாய்,,மோசின் கானுக்கு 4 கோடி ரூபாய், ஆயுஸ் பதோனிக்கு 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ்ஸில் சஞ்சு சம்சன்னுக்கு 18 கோடி ரூபாய், ஜெய்ஸ்வால்லுக்கு 18 கோடி ரூபாய், ரியான் பராக்க்கு 14 கோடி ரூபாய், துரூவ் ஜூரல்லுக்கு 14 கோடி, சிம்ரன் ஹெட்மயருக்கு 11 கோடி. சந்தீப் சர்மாவுக்கு 4 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாசாங் சிங் 5.5 கோடி, பிராப்சிம்ரன் சிங் 4 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கெபிட்டல்ஸ் அணியில் அக்சர் பட்டேல் 16 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிசேக் போரெல் 4 கோடி ரூபாய்;க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...