8 41
இலங்கைசெய்திகள்

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

Share

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

மேலும், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.

 

புலனாய்வுப் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் அமெரிக்க தூதரகம் தமது பிரிவுகளுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகங்கள் சந்தேகம் கொண்டால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...