1 43
இலங்கைஏனையவைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

Share

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களினால் நடத்தப்படும் உல்லாச விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த விலையில் ஏனையவர்களுக்கு அமைச்சர்கள் வழங்கும் நடைமுறை மாற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு இலங்கையர்களும் இந்த விடுமுறை விடுதிகள் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 09 சுற்றுலா இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்காக 166.93 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வேலைத்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தற்போது, ​​பல்வேறு அரசு அமைச்சகங்களால் நடத்தப்படும் ஏராளமான விடுதிகள் உள்ளன. அதில் சில விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...