mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

மஹிந்தானந்த பதவி விலகவேண்டும்!!

Share

“விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். அவரால் குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல்போனால் பதவி விலகவேண்டும்.”

இவ்வாறு அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எனது கட்சியும், நானும் உரக் கம்பனிகளிடமிருந்து நிதியை பெற்றுவிட்டே போராடுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இழப்பீடுகோரி நிச்சயம் வழக்கு தொடுக்கப்படும்.

அதேபோல எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மஹிந்தானந்த அளுத்கமகே நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லையேல் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும். ” – என்றார்.

அதேவேளை, விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நாட்டில் மேலும் பல பகுதிகளில் நேற்றும் போராட்டம் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...