10 24
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்படையின் வேகத்தாக்குதல் கப்பல் கொழும்பில்

Share

இந்திய கடற்படையின் வேகத்தாக்குதல் கப்பல் கொழும்பில்

இந்திய கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் கல்பேனி (INS Kalpeni) இன்று (19.10.2024) கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ஐஎன்எஸ் கல்பேனி கப்பல், இந்திய கடற்படையின் கார் நிகோபார் – வகுப்பு வோட்டர்ஜெட் எப்ஏசி என்ற வேகத் தாக்குதல் கப்பலாகும். இது 2010 ஒக்டோபர் 14ஆம் திகதி தமது சேவையை ஆரம்பித்துள்ளது.

இந்த கப்பலுக்கு லட்சத்தீவுகளில் உள்ள கல்பேனி தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இது கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் முதன்மைப் பாத்திரத்துடன் கொச்சியில் செயற்பட்டு வருகிறது.

இந்த கப்பல் கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்தநிலையில், இலங்கையில் இந்தக்கப்பல் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நங்கூரமிட்டிருக்கும்.

இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப கருவிகள், இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

நிரப்புதல்களை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, கப்பல் பணியாளர்கள் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்வார்கள் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...