glpers
செய்திகள்அரசியல்இலங்கை

‘1978’ யுகத்துக்கு ‘2022’ இல் முடிவு கட்டப்படுமா?

Share

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில், இறுதி சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டார்.

” 1978 இல் ஜே.ஆர். யுகத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே நாட்டில் அமுலில் உள்ளது. 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இக்காலப்பகுதியில் சமூகத்தில் பல மாற்றங்கள் – முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சமூகத்தின் மாற்றத்துக்கேற்ப அரசியலமைப்பிலும் மாற்றங்கள் இடம்பெறவேண்டும்.

நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பு என்பது கல்லால் செதுக்கப்பட்டதாக இருக்ககூடாது.

நெகிழ்வுத்தன்மை அவசியம்.

எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கினார்.

அந்த பணியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவானது தமது பணியை நிறைவுசெய்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனவே, 2022 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைக்கும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...