glpers
செய்திகள்அரசியல்இலங்கை

‘1978’ யுகத்துக்கு ‘2022’ இல் முடிவு கட்டப்படுமா?

Share

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில், இறுதி சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டார்.

” 1978 இல் ஜே.ஆர். யுகத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே நாட்டில் அமுலில் உள்ளது. 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இக்காலப்பகுதியில் சமூகத்தில் பல மாற்றங்கள் – முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சமூகத்தின் மாற்றத்துக்கேற்ப அரசியலமைப்பிலும் மாற்றங்கள் இடம்பெறவேண்டும்.

நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பு என்பது கல்லால் செதுக்கப்பட்டதாக இருக்ககூடாது.

நெகிழ்வுத்தன்மை அவசியம்.

எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கினார்.

அந்த பணியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவானது தமது பணியை நிறைவுசெய்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனவே, 2022 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைக்கும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...