30 6
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Share

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தப்போவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணியை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்ததை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட குழுவினால், பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியாகியிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கமைய பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துளளது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...