31 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Share

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகள் குறித்து தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளை பயன்படுத்துவதற்கு தடை என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமெனவும் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...