gover
செய்திகள்அரசியல்இலங்கை

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாதீர்! – அரசு பணிப்புரை

Share

எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பாகும்.

இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு). டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

எனவே, பட்ஜட் கூட்டத்தொடரின்போது சிலவேளை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிரணி வாக்கெடுப்பை கோரும், மேலும் சில தரப்புகள் யோசனைகளை முன்வைப்பார்கள். இவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும், எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் தோற்கடிக்காமல் இருப்பதற்காகவுமே அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைகள் இருப்பின் அது தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...

03 20
இலங்கைஅரசியல்

பழைய ஏகபோகங்களை நீக்கிப் புதிய மாஃபியாக்களை உருவாக்கக் கூடாது: மனோ கணேசன் எச்சரிக்கை!

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவுகளில் நிலவும் ஏகபோகக் கூட்டணிகளை (Monopolies) முறியடிப்பதாக ஜனாதிபதி அநுர...

02 19
செய்திகள்உலகம்

யுத்த நிறுத்தத்தை ஏற்க முடியாது, போர் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமாயின், வெறும்...

01 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி,...