1 12
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள வசந்த சமரசிங்க

Share

ராஜபக்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள வசந்த சமரசிங்க

ராஜபக்சர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசு விசாரணையைத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பிணைமுறி ஊழல், ஈஸ்டர் தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை, தாஜுதீன் கொலை, எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விடயம், 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை, கப்பல்களுக்கு உரம் ஏற்றுவது, எயார்பஸ் பேரம் ஆகியவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவை காட்டிவிட்டு துபாய் கணக்குகளுக்கு பணம் எப்படி மாற்றப்பட்டது என்பதை கண்டுபிடிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினைக்கிறார்.

அத்துடன், ரவி வித்யலங்காரவுடன் டீல் பேசி மறைக்கப்பட்ட கோப்புக்களை கண்டுபிடிக்க மாட்டோம் என்றும் நாமல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உகண்டாவில் மாத்திரமல்ல அபுதாபியில் இருந்தாலும் ராஜபக்சர்களின் ஊழல்கள் தொடர்பில் விசாரிப்போம்.

எனவே, திருடர்கள் வரிசையாக செய்து வந்த அனைத்து திருட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...