27 11
உலகம்செய்திகள்

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

Share

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

இந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ரஷ்யா (Russia) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து (India) ஆயுதங்களை வாங்கிய கொள்வனவாளர்களே இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியதால், ரஷ்யா கடுமையாக கோபம் அடைந்துள்ளது.

அத்தோடு குறித்த விடயத்திற்கு ரஷ்யா, இந்தியாவிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள், வாங்கிய நாட்டுக்கே பயன்படுத்த அனுமதிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்த ரஷ்யாவின் அதிருப்தி பன்முறை வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அரசு இதற்கான அதிகாரபூர்வமான கருத்துகளை தெரிவிக்கவில்லை, ஆனால் அவற்றைப் பரிசீலிக்காமல் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு அனுப்பப்படும் குண்டுகள் பெரும்பாலும் இத்தாலிய நிறுவனங்களால் நிரப்பப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய ஆயுதங்கள் குறைவாகவே உள்ளன என்றும் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...