SELVAM
செய்திகள்இலங்கை

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்! – செல்வம் எம்.பி கோரிக்கை

Share

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அத்தனை அம்சங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகாரமற்ற மாகாணசபை ஊடாக எமது நிலத்தை பாதுகாக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க இயலாது. எனவே, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்பு, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதே சாலச்சிறந்தது.” – என்றும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...