30 7
உலகம்செய்திகள்

பிரித்தானிய விசா திட்டத்தில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

Share

பிரித்தானிய விசா திட்டத்தில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஒய்வெட் கூப்பர் அறிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின் படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள், 10 யூரோ என்ற கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்.

பிரித்தானியாவின் முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ‘Electronic Travel Authorization’ என்ற மின்னணு பயண அனுமதி திட்டத்தின் மூலம் தற்காலிகமாக அல்லது பரிதானத்தில் பிரித்தானியா வழியாக பயணிக்கும் பயணிகள் முன்பே அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு 10 யூரோ கட்டணம் விதிக்கப்பட்டு, இம்முறை கட்டாயமாக கட்டார், பார்ஹைன், குவைத், ஓமான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் குடியுரிமையாளர்கள் பயண அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், யார் யார் பிரித்தானியாவிற்கு பயணம் செய்கின்றனர் என்பதற்கான முழுமையான கண்காணிப்பு சாத்தியமாகும் என்றும், பயண அனுமதி தேவையில் இருந்து வரும் வெளிப்பாடுகள் நிரப்பப்படும் என்றும் கூப்பர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...