TNA
செய்திகள்இலங்கை

கொழும்பில் களமிறங்கும் தமிழ்க் கூட்டமைப்பு!

Share

2022 மார்ச் மாதமளவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்பு கிளை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மேலும் சிலரும் கட்சி உயர்பீடத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் குதிப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், ஐக்கிய மக்கள் சார்பில் மலையக மற்றும் வடக்கு தமிழர் ஒருவர் போட்டியிட்டதால் அந்த முடிவை கூட்டமைப்பு மாற்றிக்கொண்டது.

அதேபோல மனோ கணேசனுடன் இருக்கும் இணக்கப்பாடு காரணமாகவும் கொழும்பில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கூட்டமைப்பு தொடர்ந்தும் பின்னடிப்பு செய்துவருகின்றது.

எனினும், இம்முறை அந்த முடிவில் மாற்றம் நிகழக்கூடும் எனவும், கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்கலாம் எனவும் கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...