mano ganesan
செய்திகள்இலங்கை

ஆழமுடியாவிட்டால் சென்று விடுங்கள் – அரசுக்கு மனோ அறிவுரை!

Share

“ஆளமுடியாவிட்டால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால் போய் விடுங்கள். ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு, அறிவுறுத்துகின்றார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் இன்று பொருட்களின் விலை விண்ணைத்தொட்டுள்ளது. தேநீராக இருக்கலாம், பனிஸாக இருக்கலாம், சோற்று பார்சலாக இருக்கலாம் சாதாரண மக்களுக்குரிய அனைத்து பொருட்களின் விலைகளுமே அதிகரித்து வருகின்றன. பாதீடு மூலமாக சரியான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்கும் என்கின்றனர். நம்பவே முடியாது.

நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், ஆளமுடியவில்லை என்றால், போய்விடுங்கள். சரியானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...