3 42
இலங்கைசெய்திகள்

சஜித் குப்பை வண்டிக்கு நிகரானவர்: விமர்சித்த அனுர

Share

சஜித் குப்பை வண்டிக்கு நிகரானவர்: விமர்சித்த அனுர

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நகரசபையின் குப்பை வண்டிக்கு நிகரானவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“சஜித் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் தாடி வளர்க்க இடமளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் உண்மையா என என்னிடம் பலர் கேட்கின்றார்கள்.

நானும் தாடி வளர்த்திருக்கின்றேன் என நான் கூறினேன். ஐந்து முறை தொழுகை செய்ய இடமளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. இவை எல்லாம் என்ன கதை, இது அரசியலா?

சஜித்தின் முகாம் அரசியல் ரீதியாக குழம்பிப் போயுள்ளது. தலைவர் முதல் கீழ் மட்ட உறுப்பினர்கள் வரையில் எவரிடமும் கொள்கையில்லை.

அவர்களிடம் இலக்கு இல்லை. திட்டமில்லை. செய்யும் வேலையில்லை. ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகளை சஜித் பேசி வருகின்றார்.

அதற்கு பொருத்தமான சிலர் அவருடன் இருக்கின்றார்கள். இதுவே இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு நேர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...