12 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

Share

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர், அந்த நேரத்தில் வற்புறுத்த முயன்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருந்தால், அதனை புதுடில்லியில் உள்ளவர்கள் வழங்கத் தயாராக இருப்பதாக கோட்டாபயவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும், வன்முறையின் மூலம் அவர் வெளியேற்றப்படுவது புதுடில்லிக்கு சிறந்த விடயமாக இருக்காது என்ற அடிப்படையில் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் முதலில் இந்தியாவுக்குச் சென்றார் என்பதும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோட்டாபய அதனை ஏற்காது நாட்டில் இருந்து வெளியேறினார்

பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ளமையை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...