101308275 img 20180511 wa0024
செய்திகள்இந்தியா

தமிழக அகதிகள் முகாமிலிருந்து 65 பேர் மாயம்!

Share

இந்தியா – தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கைத் தமிழர்கள் 65 பேர் மாயமான நிலையில், படகில் கனடா நாட்டிற்குத் தப்பிச்சென்றார்களா என்பது தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா – தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 65 பேரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை.

இது தொடர்பாக கியூ பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஏறி தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கனடா நாட்டுக்குச் செல்லும் நோக்கத்துடன் படகில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை குறித்த இலங்கைத் தமிழர்கள் 65 பேரும் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் சிக்கித் தவிப்பதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை கியூ பிரிவு பொலிஸார் சேகரித்து வரும் அதேவேளை, இதற்காக இன்டர்போல் உதவியும் நாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...