4 12
இலங்கைசெய்திகள்

நாமல் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட மகிந்தவின் சகா

Share

நாமல் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட மகிந்தவின் சகா

மக்களினதோ அல்லது கட்சியினதோ தேவைக்கு அமைய நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கும், 2022 ஆம் ஆண்டு கலவரங்களுக்கும் நாமல் ராஜபக்சவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென குற்றம் சுமத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை விடவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச மீதே மக்களுக்கு அதிக கோபம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சஜித்திற்கு மறைமுகமாக உதவும் செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை தாம் சந்தித்த போது “நாமலுக்கு விசர்” என மகிந்த கூறியதாக பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...