03 photo
செய்திகள்இலங்கை

இயற்கை எய்தினார் நல்லூர் ஆலய நிர்வாகி!

Share

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

1964 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக குமாரதாஸ மாப்பாண முதலியார் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு, இந்து சயமப் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாப்பாண முதலியாரின் இழப்பு பாரிய இழப்பு எனவும், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தனதும், மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...