digital iddddd
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி அட்டை

Share

முழுமையான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வெளிநாடு செல்லவுள்ளோருக்கு குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் குறியீட்டில் அடிப்படையில் டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது .

இதன் மூலம் எந்தவொரு நபரும் போலி அட்டை தயாரிப்பதற்கான சந்தர்ப்பம் தடுக்கப்படும் வகையில் முழுமையான பாதகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...