16 12
இலங்கைசெய்திகள்

தேர்தல் குறித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

Share

தேர்தல் குறித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

தேர்தல் தொடர்பான உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்னநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை குறித்த நிறுவனங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருடன் தற்பொழுது இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படும் பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபருடன் இணைந்து செயல்பட உத்தேசித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அன்று முதல் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...