10 13
இலங்கைசெய்திகள்

சரத் பொன்சேகாவின் அதிரடி அறிவிப்பு

Share

சரத் பொன்சேகாவின் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

73 வயதான ஜெனரல் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கடமையாற்றி வருவதோடு, 2010 ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊழல் மோசடிகளை இல்லாத ஒலித்து இலங்கையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...