5 25
உலகம்செய்திகள்

அரைவாசியாக குறைக்கப்பட்ட நிதி : உக்ரைனை ஏமாற்றிய ஜேர்மன்

Share

அரைவாசியாக குறைக்கப்பட்ட நிதி : உக்ரைனை ஏமாற்றிய ஜேர்மன்

பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், புதிய பிரதமர், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் என கூறியுள்ளதோடு, சில நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனின் நெருங்கிய கூட்டாளரான ஜேர்மனியிலிருந்தும் உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று வெளியககியுள்ளது.

குறித்த செய்தியில் உக்ரைனுக்கு வழங்கும் உதவியை பாதியாக குறைக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜேர்மனியின் வரைவு வரவு செலவு திட்டத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி உதவி, 8 பில்லியன் யூரோக்களிலிருந்து 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஜேர்மனி, உக்ரைனுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்துவரும் இரண்டாவது நாடாகும். ஏற்கனவே அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானால் அமெரிக்கா வழங்கும் நிதி குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என வெளியாகியுள்ள செய்தியால் உக்ரைனில் அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. ட்ரம்புக்கு அது நல்ல செய்தியானாலும், உக்ரைனுக்கு அது நல்ல செய்தி இல்லை என கருதப்படுகிறது.

ஏனெனில் ட்ரம்ப் ஜனாதிபதியானால் உக்ரைனுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...