sajith 7567
செய்திகள்இலங்கை

நாட்டின் எதிர்காலம் பெரும் ஆபத்தில்!! – எதிர்கட்சித் தலைவர் தெரிவிப்பு

Share

நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலமும். நாட்டின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) கட்டளை நியதிகள் சட்டம் 27 (2) கீழ் கேள்விப் பத்திரங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய அரசாங்கமானது கல்வியில் உள்ள பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதில் ஈடுபாடு இல்லாமல் செயற்பட்டு வருகிறது.,

ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி கிட்டத்தட்ட அதன் கல்வியின் தரத்தைப் பொறுத்தே அமைந்துள்ளது.

இருப்பினும், கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த இணையவழி முறையின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் சமமான கல்வியைப் பெற்றிருக்கும் என்பதில் திருப்திகரமான நிலை இல்லை.

உலகெங்கிலும் உள்ள பிற நாடுகள் கொவிட் நிலைமையை நிர்வகித்தவண்ணம். கல்வி புத்துயிர் பெறுவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளன.

எனினும், பூரணமாக வழங்கப்படாத க.பொ.த சாதாரண தர முடிவுகள், ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்காக இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பெற்றோர்களும் காலவரையின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...