18 2
இலங்கைசெய்திகள்

வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

Share

வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வேகத்தடை தொடர்பான விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 2,214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு இதன் விளைவாக 2,321 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,103 சாலை விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு 1,154 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை வேகக் கட்டுப்பாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ. 50 மில்லியனை இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது .

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய வேகக்கட்டுப்பாடு வரம்பு விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சகம் வெளியிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...