டெல்டா தொற்று ப
இலங்கைசெய்திகள்

2ஆவது டோஸின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைவடையலாம்!

Share

இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும் தன்மை அதிகரிக்கலாம்

என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூறு பிரிவின் பணிப்பாளர் வைத்தியா் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் டெல்டா தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், அல்பா தொற்றினால் ஏற்படும் பாதிப்பை விட இரண்டு மடங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்துள்ளதாவது,

இரண்டு முறை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஒருவருக்கு டெல்டா தொற்று ஏற்படுமாயின் அவரிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பரவலடையும் தன்மை குறைவடையும்.

ஆனால் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மையானது குறைவடைதாகவும், டெல்ட்டா தொற்று பரவலடையும் தன்மை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...