24 66569ab506d54
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் கைது : இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு

Share

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் கைது : இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு

இந்தியாவின் (India) அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையை (Sri Lanka) சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இரண்டு பேரை இலங்கை பொலிஸார் தடுத்து வைத்துள்ள நிலையில், அவர்களையும் விசாரணை செய்யும் வகையில் குஜராத் பொலிஸாரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை ஓஸ்மண்ட் ஜெரார்ட் என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவரை கைது செய்வதற்காக 2 மில்லியன் ரூபாயை இலங்கை அரசாங்கம் வெகுமதியாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அபுதா என்ற மதப்போதகர் சுமார் 42 நாட்களாக போதனைகளை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுக்கும் இந்தியாவில் உதவியதாக கூறப்படும் மூன்று பேர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி தகவல்களுக்கு அமைய, பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் வழியாக ஒரு ஆயுதம் வழங்கப்பட்டமை தொடர்பான விடயம் தற்போது விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணையின் பல்வேறு கோணங்களைத் தொடர மூன்று பொலிஸ் அணிகள் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...