24 66542224d7256
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு!

Share

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு!

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”இந்தியா மீது தாக்குதல் நடத்தச் சென்ற போது கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ் உறுப்பினர்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் ஒருவரும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தகவலினை கவனமாக விசாரிக்குமாறு பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

பொலிஸ் சட்டப் பிரிவினால் இது தொடர்பில் தமக்கு விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...

Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...