சேதனப் பசளையில் பயிர்ச்செய்கை 4 scaled
செய்திகள்இலங்கை

இரணைமடுக் குளத்தின் கீழ் சேதனப்பசளையில் பயிர்ச்செய்கை

Share

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான காலபோக செய்கை சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரப்பரளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

காலபோக பயிர்ச்செய்கை ஆரம்ப திகதியாக எதிர்வரும் 06 ஆம் திகதியாகவும் இறுதி அறுவடைத் திகதி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதியாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்துக்கு 90.2 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...