24 6641466f608ce
இலங்கைசெய்திகள்

நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள்

Share

நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள்

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்த நிலையில் நீதிமன்றின் செயல்பாடுகளுக்கு அது பாரிய இடையூறாக மாறியுள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு இடங்களும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஐந்து இடங்களும் வெற்றிடங்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதியரசர்கள் ஓய்வு பெற்றதை அடுத்தே இந்த இடங்கள் வெற்றிடங்களாகியுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீதியரசர் கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

இதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்களின் வெற்றிடங்கள் காரணமாக நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் செயல்படாததால், வழக்குகள் தேங்கி கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் ஆகியோரே உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு நியமிக்கத் தகுதி பெற்றவர்களாவர்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஓய்வுபெறவுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு வெற்றிடம் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...