arrest scaled
செய்திகள்இந்தியா

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றவர் கைது!

Share

இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து,

சுமார் 500 சைனைடு குப்பிகள் மற்றும் சைனைடு பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற போது, ராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸார் உச்சிப்புளியில் வைத்து கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஸ்கரன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தப்பி ஓடிய குமரன் என்ற உதய குமார் என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வைத்து க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

நேற்று (30) அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

இவர் மீது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது போலியான பெயரில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் தொடக்கியது மற்றும் ஆதார் கார்டு வாங்கியது, சிம்கார்டு வாங்கியது என,

3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...