elon musk harambe
செய்திகள்உலகம்

உலகின் பணக்கார பட்டியல் வெளியீடு.. முதலிடத்தில் எலான் மாஸ்க்..

Share

உலகின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மாஸ்க் அமேசான் முன்னாள் நிறுவனரான ஜெப் பெஸோஸை பின்னுக்கு தள்ளினார்.

உலகின் பணக்காரர்கள் தரவரிசை பட்டியல் 10 முதல் 100 வரை வெளியிடப்படுவது வழக்கம். இந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது.

இதில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மாஸ்க் முதலிடம் பிடித்துள்ளாார். இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தற்போது டெஸ்லா நிறுவனத்திற்குரிய பங்குகளின் விலை உயர்வால் எலான் மாஸ்க் 20,000 கோடி டாலர் சொத்துக்கள் கொண்டு முதல் பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.

மேலும் 2ஆம் இடம் பிடித்த ஜெப் பெஸோஸ்ஸின் சொத்து மதிப்பானது 19,200 கோடி டாலராக உள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் விண்வெளி ஆராய்ச்சி, தானியங்கி கார் உற்பத்தி உட்பட பல துறையில் போட்டியிட்டு வருகின்றனர்.

தற்போது பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் “எலான் மாஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்ததை கொண்டாட, அமேசான் நிறுவனருக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றில் 2ஆவது நம்பரை பொறித்து அனுப்புகிறேன்” என்றும் மேலும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின் மெயில் என்ற பெயரை அதில் போட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...