ezgif.com gif maker 1 1
செய்திகள்உலகம்

இருளில் மூழ்கியது சீனா!

Share

சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சீனாவில் உள்ள சுமார் 20 மாகாணங்கள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன.

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையும் நோக்கில் சீனா மின் பகிர்வை ரேசன் முறையில் விநியோகிப்பதற்கு தொடங்கியுள்ளது.

ஒரு நாளில் 8 முறை என்கிற வகையில் தொடர்ச்சியாக 4 நாட்கள் மின் துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது எனவும் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கடும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டு ஏற்றுமதிகளும் பாதிக்கப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சீனாவின் மின்வெட்டு சர்வதேச பிரச்சினையாக மாறி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சீன பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படும் உலக அளவிலான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...