ரயில் சேவைகள்dd
செய்திகள்இலங்கை

இரு வாரங்களின் பின்னரே ரயில் சேவைகள்!

Share

நாளை முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என அரசு அறிவித்துள்ளது.

இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாளை காலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பொதுச் சேவையை வழமை போன்று செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...