24 6621d8d72b0eb
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு உயர் பதவி

Share

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு உயர் பதவி

ஐக்கிய நாடுகளின் (united nation) மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

அத்துடன் அவர் உலக வங்கியுடன் (World Bank) இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார்.

இலங்கையின் பொருளாதார நிபுணர் குருகுலசூரிய அமெரிக்காவின் (United state of america) யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஐக்கிய நாடுகளின் (UN) மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன், கலாநிதி குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின் (UN) மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

அங்கு அவர் 140 நாடுகளில் இயற்கை, காலநிலை மற்றும் எரிசக்தி நிதியை மேற்பார்வையிட்டார்.

Share
தொடர்புடையது
Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...

Untitled 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளுக்குத் தடையின்றி உர விநியோகம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அதிரடி உத்தரவு!

2026 ஆம் ஆண்டுக்கான யால (சிறுபோக) பருவ விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி...

Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...