Gas 1
செய்திகள்இலங்கை

எரிவாயு விலையை குறைக்க தீர்மானம்!

Share

சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக இவ்வாறு விலைகளை குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் டொலர் அதிகரிப்பு காரணமாக விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன.

இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆராய்ந்து அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்தது.

எரிவாயு நிறுவனங்களின் செயற்றிறனின்மையை சீர்செய்து பாவனையாளர்களுக்கு நன்மையை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் இரு சமையல் எரிவாயு நிறுவனங்களை ஒன்றிணைத்து அரச நிறுவனமாக செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போதுள்ள விலையை விட 125–150 ரூபா வரை எரிவாயு விலையை குறைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...