Gas 1
செய்திகள்இலங்கை

எரிவாயு விலையை குறைக்க தீர்மானம்!

Share

சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக இவ்வாறு விலைகளை குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் டொலர் அதிகரிப்பு காரணமாக விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன.

இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆராய்ந்து அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்தது.

எரிவாயு நிறுவனங்களின் செயற்றிறனின்மையை சீர்செய்து பாவனையாளர்களுக்கு நன்மையை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் இரு சமையல் எரிவாயு நிறுவனங்களை ஒன்றிணைத்து அரச நிறுவனமாக செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போதுள்ள விலையை விட 125–150 ரூபா வரை எரிவாயு விலையை குறைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...