24 66162a51ef12e
உலகம்செய்திகள்

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

Share

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

கூகுள் நிறுவனமானது அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அது ஏராளமான புதிய அம்சங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பதாகவும் ஒரு தரப்பால் கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்த அண்ட்ரொய்ட் 15 புதுப்பிப்பில் ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) என்ற அம்சமும், லுக்அப் (LookUp) என்ற புதிய கருவி (Tool) அமைப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) அம்சமானது பலர் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் சில பயனர்கள் மத்தியில் அந்தரங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கேள்விகளையும் பரவலாக ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் (Bluetooth) அம்சத்தை ஓஃப் அல்லது டிசேபிள் (Off or Disable) செய்துவிட்டால் என்னவாகும்? அடுத்த நொடியே போன் உடன் இணைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான ப்ளூடூத் (Bluetooth) சேவைகளில் இருந்தும் பயனர்கள் முழுவதுமாக துண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பில் வரும் ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) ஆனது ப்ளூடூத் ஐ (Bluetooth) எப்போதும் செயற்பாட்டு நிலையிலேயே வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, புதிய மாற்றம் செய்யப்பட்ட ப்ளூடூத் (Bluetooth) அம்சத்தில் ப்ளூடூத் ஓஃப் (off) செய்யப்பட்டாலும் பார்ப்பதற்கு ஓஃப் செய்யப்பட்டு இருப்பது போல தோன்றினாலும், அது குறைந்த ஆற்றல் நிலையில் (Low-energy state) தொடர்ந்து செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக இந்த புதுப்பிப்பு அறிமுகப்படுத்தவுள்ள லுக்அப் (LookUp) என்ற புதிய கருவி (Tool) அமைப்பானது, தொலைபேசிக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இனங்கண்டு அழைப்பை ஏற்க வேண்டுமா, புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...