24 66160600e4154
இலங்கைசெய்திகள்

டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் தலைவரின் உதவியாளர் கைது

Share

டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் தலைவரின் உதவியாளர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி, கங்காமொல வீதி, மட்டக்குளிய ஆனையிறவுத் தோட்டம், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...