24 6611024b21f1f
இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை

Share

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விஷேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, கிராம அலுவலருக்கு வழங்கப்பட்ட அலுவலக கொடுப்பனவு மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவு 01.04.2024 முதல் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாதாந்த அலுவலக கொடுப்பனவு மாநகர சபை அல்லது நகரசபை பிரதேசத்தில் ரூபா 3000 ஆகவும் பிரதேச சபை பகுதியில் 2000 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கான எழுதுபொருள் உதவித் தொகை 3000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைச்சர் சபையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அசோக பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...