ஹேமந்த ஹேரத் 4
இலங்கைசெய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றாதீர்!

Share

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டாம். இது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 12– 19 வயதுக்குட்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கே தடுப்பூசிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆரோக்கிய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். அதனால்தான் இது குறித்து வைத்திய நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

ஆகவே ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற விரைந்து செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

நிலைமைகளை ஆராய்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வைத்திய நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகள் முன்வைப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...