ஹேமந்த ஹேரத் 4
இலங்கைசெய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றாதீர்!

Share

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டாம். இது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 12– 19 வயதுக்குட்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கே தடுப்பூசிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆரோக்கிய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். அதனால்தான் இது குறித்து வைத்திய நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

ஆகவே ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற விரைந்து செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

நிலைமைகளை ஆராய்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வைத்திய நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகள் முன்வைப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...