24 660e642457adc
இலங்கைசெய்திகள்

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

Share

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க மேற்கொள்ளப்பட்ட பசில் ராஜபக்சவின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, அரசியலமைப்பு ரீதியில் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போவதில்லை எனவும் அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவசர நாடளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும், அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நாடளுமன்ற உறுப்பினர்கள் போதாத காரணத்தினால் அந்த முயற்சி இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...