24 6607b3277f095
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..!

Share

வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..!

தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத்தராத, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவனஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல்.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதற்கான செயற்பாட்டிற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...