24 6607b3277f095
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..!

Share

வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..!

தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத்தராத, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவனஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல்.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதற்கான செயற்பாட்டிற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...