24 660509acc4752
இலங்கைசெய்திகள்

ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிறுவர் நோயாளிகள்

Share

ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிறுவர் நோயாளிகள்

கொழும்பு – மகரகம அபேக்‌ஷா புற்றுநோய் மருத்துவமனையிலுள்ள நேரியல் முடுக்கியின் (linear accelerators) நீண்டகால செயலிழப்பு காரணமாக நூற்றுக்கணக்கான சிறுவர் நோயாளிகள் ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கதிரியக்கச்சிகிச்சைக்கு தேவையான நேரியல் முடுக்கி கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து செயலிழந்துள்ளது.

இதன்காரணமாக, நிலைமை மிகவும் தீவிரமான போதிலும், சுகாதார அமைச்சு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்காததால் பொதுமக்களால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அபேக்‌ஷா மருத்துவமனையில் தற்போது ஐந்து நேரியல் முடுக்கிகள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இருப்பினும், செயலிழந்துள்ள இயந்திரமானது குழந்தை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

மேலும், இந்த செயலிழப்பு காரணமாக 500இற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். பலர், குறிப்பாக குழந்தை நோயாளிகள் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கதிரியக்கச்சிகிச்சைகளுக்காக 700,000 முதல் 1.7 மில்லியன் ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து பழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்ய அல்லது மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...