gl7
இலங்கைசெய்திகள்

சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கோம்! – பீரிஸ் திட்டவட்டம்

Share

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக விசாரணை மூலமே தீர்க்கப்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயார் இல்லை.

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். இலங்கையின் தனித்துவங்களை பாதுகாத்து இறையாண்மை நோக்கி பயணிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்ளும்.

உள்நாட்டு பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை.

வெளிநாட்டு பொறிமுறை எமது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது. அத்துடன் எமது அரசியல் கட்டமைப்புக்கு எதிரானதுமாகும்.

வேறு நாடுகளில் பிரச்சினைகள் பல உள்ள நிலையில் எமது நாட்டின் மீது உள்ள பார்வையில் எந்த அடிப்படைக் காரணமும் இல்லை.

மேலும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...