தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்திலுள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய பொழுதே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் பொழுது அதிகளவிலான ஐம்பொன் சிலைகளும், பூஜை பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை குலோத்துங்க சோழர் காலத்தில் பூஜிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
Leave a comment