vikatan 2019 05 98fe3703 09f2 4f58 a001 f6c453bad9ff 122357 thumb
செய்திகள்இலங்கை

அரிசி வர்த்தகத்தில் இருந்து விலகிடுவோம்! – எச்சரிக்கை விடுப்பு

Share

அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்காக ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லுக்கு 50 ரூபாவையும் ஒரு கிலோகிராம் சம்பா நெல்லுக்கு 52 ரூபாவையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இந்த நிர்ணயம் காரணமாக, அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு அரிசியை எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்ற கேள்வியை அரிசி உற்பத்தியாளர்கள் முன்வைக்கின்றனர்.

ஆகவே அரிசிக்கு நியாயமான விலையை வழங்கத் தவறும் பட்சத்தில் அரிசி வர்த்தகத்தில் இருந்து விலகப்போவதாக சங்கம் எச்சரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசிக்கு 110 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கு 130 ரூபாவும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசிக்கு 160 ரூபாவும் என விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...