tamilni 323 scaled
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப தாய்லாந்து இணக்கம்

Share

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப தாய்லாந்து இணக்கம்

மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மியன்மார் அரசாங்கமானது சைபர் கிரைம் வலயத்தில் 56 இலங்கையர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்த குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...